போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

0
316
illeagal note two person arrest police investigation start

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கலேன்பிந்துனுவௌ ரத்மல்வெலிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். illeagal note two person arrest police investigation start

கலேன்பிந்துனுவௌ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்த போலி 1000 ரூபா தாள்கள் 70 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

23 மற்றும் 20 வயதுடைய ரத்மல்வெட்டிய மற்றும் குருணாகல் பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் கலேன்பிந்துனுவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
illeagal note two person arrest police investigation start

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites