இயக்குனர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் உருவாகும் ”சிகை” படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக ஒட்டகத்தை வைத்து ஒரு புதிய படமொன்றை இயக்க இருக்கிறார்.Tamil Cinema Animals Season Trends tamil news
அதாவது, தமிழ் சினிமா இப்போது விலங்கு பக்கம் தாவி இருக்கிறது. ஜீவா ”கொரில்லா” என்ற படத்தில் சிம்பன்சி குரங்குடன் நடித்து வருகிறார். பாம்பை வைத்து உருவாகும் ”பாம்பன்”, ”நீயா-3”, பிரபுசாலமன் இயக்கும் 2 யானை படங்கள் என்று வரிசையாக விலங்கு படங்கள் உருவாகின்றன.
இந்நிலையில், ”இது ஆரோக்கியமானதா..?” என்று ஒட்டகத்தை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜிடம் கேட்டோம். ”நான் அடுத்து ஒட்டகத்தை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கிறேன். சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார்.
ஒட்டகத்தை பராமரிக்க ஆகும் செலவு ஒரு ஹீரோவின் சம்பளத்துக்கு இணையானது. ராஜஸ்தானில் வைத்து அவைகளை படப்பிடிப்புக்கு பழக்கி பின்னர் அவற்றிற்கு தேவையான வசதிகள் வழங்கி அழைத்து வந்துள்ளோம்.
முக்கியமாக விலங்குகளை வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் வருவார்கள். குழந்தைகள் விரும்பி பார்ப்பார்கள். தமிழ் சினிமா இழந்த குடும்ப ரசிகர்களை திரும்ப தியேட்டர்களுக்கு கொண்டு வரும் முயற்சியே இது.”
எனத் தெரிவித்துள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!
* விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!
* குழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..!
* இணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..!
* மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)
* வீட்டு ஞாபகத்தால் ஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங் : நடிப்புக்கு முழுக்கு போட முடிவு..!
* கழுகு-2 படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!
* படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!