லண்டனில் பாதுகாப்பு தீவிரம் – மேயர் தெரிவிப்பு

0
297
Mayor security intensity London tamil news

மத்திய லண்டனில் இடம்பெற்ற தாக்குதலின் எதிரொலியாக லண்டன் வீதிகளில் பொலிஸ் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் மேயர் சாதிக்கான் தெரிவித்தார். Mayor security intensity London tamil news

நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் குறித்து இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த மேயர், ”நேற்றைய தாக்குதலை தொடர்ந்து இன்று முதல் மத்திய லண்டன் பகுதிகளில் ஆயுதமேந்திய மற்றும் ஆயுதமற்ற பொலிஸ் அதிகாரிகளின் அதிகரித்த பிரசன்னத்தை லண்டன் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதானிக்கலாம்.

எனினும், பொலிஸ் மற்றும் நிபுணர்களின் இரகசிய செயற்பாடுகளை மக்களுக்கு அவதானிக்க முடியாது. எமது நகரை பாதுகாப்பதற்கான புதிய வழிகளை கண்டறிந்து அதனை செயற்படுத்த நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.

ஆனால், பாதுகாப்பு தொடர்பில் நாம் எப்போதும் மனிநறைவு கொள்ளக் கூடாது. நாம் எப்பொழுதும் பாதுகாப்பு தொடர்பாக துரிதமாக செயற்பட வேண்டும்.

கடந்த சில மாதங்களை நோக்கும் பட்சத்தில் லண்டன் மாத்திரமின்றி உலகின் பல்வேறு பகுதிகளும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளது.

ஒரு மேயர் என்ற வகையில் நகரின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு நான் அரசாங்கம், பாதுகாப்பு தரப்பு, அவசர சேவை பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றேன்” எனத் தெரிவித்தார்.

tags ;- Mayor security intensity London tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************