இருவரில் யாரை திருமணம் செய்ய போகிறாய் என பொலிஸார் கேட்க, இருவரும் எனது நண்பர்கள் எனக் கூறி மூன்றாவது நபருடன் சென்ற பெண்!

0
288
 two person fight near Bangalore highway

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வடிவேலு படத்தில் வரும் காமெடி போல் பெண் ஒருவருக்காக 2 ஆண்கள் சண்டை போட்ட நிலையில் 3வது நபருடன் அந்த பெண் சென்று விட்டார். two person fight near Bangalore highway

பெங்களூருவில் இருந்து நெலமங்களா செல்லும் தேசிய நெடுஞ்சாலை 48ல் பவிகெரே கிராஸ் என்ற சிறிய கிராம பகுதியில் 2 பேர் சண்டை பிடித்து கொண்டு இருந்துள்ளனர். அதன் அருகே பெண் ஒருவர் நின்றுள்ளார்.

இதனால் அந்த வழியே சென்றவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி கவனித்து கொண்டும், சிலர் நடந்த சம்பவத்தினை செல்போன்களில் படம் பிடித்தும் உள்ளனர். மற்றும் சிலர் அவர்களை தடுத்து நிறுத்தவும் முயன்றுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்ததுடன், தகவல் அறிந்து அங்கு வந்த பொலிஸார் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு நடந்த விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சசிகலா (வயது 38) என தெரிய வந்தது. அவர் கடந்த 2000ம் ஆண்டில் ரங்கசாமி என்பவரை திருமணம் செய்து, 2010ம் ஆண்டில் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அதன்பின் துணி தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்த ரமேஷ் என்பவருடன் சசிகலா வாழ்ந்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டில் குமார் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். அதன்பின் 6 மாதங்கள் கழித்து அவரை பிரிந்து சென்ற சசிகலா 2017ம் ஆண்டில் சிக்கபிதருகல்லு மூர்த்தி என்பவருடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.

இதில் மூர்த்திக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர். இதேவேளையில் சசிகலா பணிபுரிந்த துணி தொழிற்சாலையில் வேன் டிரைவராக இருந்த சித்தராஜு என்பவர் சசிகலாவை திருமணம் செய்து கொள்ள விரும்பி இதுபற்றி தெரிவித்துள்ளார்.

மூர்த்திக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது, சித்தராஜுவுக்கு திருமணம் ஆகவில்லை என கணக்கு போட்ட சசிகலா, சித்தராஜுவுக்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்.

இதன்பின் பேருந்து நிலையம் ஒன்றில் சித்தராஜுவுடன் கடந்த சனிக்கிழமை சசிகலா நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த மூர்த்தி, சித்தராஜுவை அடிக்க தொடங்கி உள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரில் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறாய் என சசிகலாவிடம் பொலிஸார் கேட்டபொழுது, இருவரும் எனது நண்பர்கள். ஒருவர் மீது ஒருவர் பொறாமையில் உள்ளனர் என பதிலளித்து உள்ளார். இதன்போது, சசிகலாவின் நண்பர் என கூறி கொண்டு 3வது நபரொருவர் அங்கு வந்துள்ளார். அவருடன் சசிகலா சென்று விட்டார்.

tags :-  two person fight near Bangalore highway
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்