கருணாநிதி இறப்பு – முல்லைத்தீவில் வெடி கொளுத்தி கொண்டாட்டம்

0
1066
Mullaitivu people celebration firing creakers death day karunanidhi

(Mullaitivu people celebration firing creakers death day karunanidhi)

தமிழகத்தில் 5 முறை தெரிவாகிய முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை உயிரிழந்த தகவல் வெளியானதை அடுத்து முல்லைத்தீவு நகரில் வெடிகொளுத்தி ஆரவாரம் செய்துள்ளனர்.

இன்று 07.08.18 மாலை 7.00 மணியளவில் முல்லைத்தீவு நகர்பகுதியில் மக்கள் வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடிகொளுத்தி தங்கள் ஆரவாரத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பிற்கு கருணாநிதியும் காரணமாக இருந்தார் என்றும் அவர் நினைத்திருந்தால் ஈழத்தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் இன அழிப்பிற்கு காரணமாக அமைந்த ஒரு அரச தலைவர் என்பதால் அவரின் இறப்பிற்கு மகிழ்ச்சி வெளிப்படுத்தி வெடிகொளுத்தி கொண்டாடியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இருந்த போதிலும் கலைஞர் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி போற்றத்தக்கது எனவும் வெடிகொளுத்திய மக்களில் சிலர் தெரிவித்துள்ளார்கள்.

(Mullaitivu people celebration firing creakers death day karunanidhi)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites