(former ambassador Jalaya Wickramasuriya reopened appear court)
அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அத்துடன், அவருடைய பிணைக்காக முன்னின்ற அவரின் மனைவி மற்றும் அவரின் உறவுக்கார சகோதரியையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அவருடைய பிணைக்காக முன் வைக்கப்பட்ட அவருடைய இடத்தையும் அரசுடமையாக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கு மீதான விசாரணைகள் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
(former ambassador Jalaya Wickramasuriya reopened appear court)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- மத்தல விமான நிலையத்தினால் மாதாந்தம் 2500 இலட்சம் ரூபா செலவு
- வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; இரண்டாம் தவணை நிறைவு
- கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்
- பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு