யாழ் மாநகர சபை மக்களிடம் மிகவும் கேவலமான முறையில் கட்டண அறவீடுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். Jaffna Municipal Council Charging Fee Pannai Entertainment Area Tamil News
பல பொருத்தமற்ற கட்டண அறவீடுகளில் கவனம் செலுத்தி வரும் யாழ் மாநகர சபை தற்போது பண்ணை கடற்கரையில் பொழுதுபோக்கும் நோக்கில் கூடும் மக்களிடமும் பணம் அறவீடு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
மகிந்த அரசு காலத்தில் மிகவும் அழகாக புனரமைக்கப்பட்ட பண்ணை கடற்கரை பகுதியில் தற்போது உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடுவது வழமை.
இவ்வாறு அங்கு பொழுது போக்க கூடும் மக்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் போது அதற்கு மாநகர சபைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அன்றாட பொழுது போக்கு தளங்கள் தொடர்பில் ஏனைய நாடுகள் தமது கவனத்தை செலுத்தி வரும் நிலையில் , யாழ்ப்பாண மக்களின் ஒரே ஒரு பொழுது போக்கு தளமாகிய பண்ணையில் இவ்வாறு பணம் அறவிடும் செயற்பாடு தொடர்பில் மக்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- மத்தல விமான நிலையத்தினால் மாதாந்தம் 2500 இலட்சம் ரூபா செலவு
- வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; இரண்டாம் தவணை நிறைவு
- கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்
- பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு