வாழைச்சேனையில் இரண்டு பெண்கள் கைது

0
443
3099 arrests island wide

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட மிக நீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.(two women arrested valaichenai,Tamilnews,Srilanka tamilnews)

வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து குறித்த பெண்கள் கைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறித்த பெண்களிடம் இருந்து 360 கிராம் கஞ்சா மற்றும் 30 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

குறித்த பெண்கள் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தவலை அடுத்து, சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சகோதரிகள் எனவும் சந்தேகந நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:two women arrested valaichenai,two women arrested valaichenai,two women arrested valaichenai,