மஹேந்திரனை கொண்டு வந்தால் பதிலளிக்க தயார் : மஹிந்த

0
457
Priority Buddhism mentioned Constitution doubt Mahinda Rajapaksa

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பிலான முதலாவது சந்தேக நபரான அர்ஜுன் மகேந்திரனை பாராளுமன்றிற்கு அழைத்து வந்தால் தான் நியூயோக் டைம்ஸ் பத்திரிகை தொடர்பில் பதிலளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(Mahinda responds New York Times article,Tamilnews)

பெபிலியான சுனேந்ரா தேவி பிரிவெனாவின் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“தற்போது மிகவும் வெற்றிகரமான ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆட்சியில் மக்களுக்கு சாப்பிட முடியவில்லை. வெற்றி என்பதால் தானே தேர்தலை பிற்போடுகிறார்கள்.
நியூயோக் டைம்ஸ் குற்றச்சாட்டு தொடர்பில் நான் பதிலளித்தேன்.
நாம் மஹேந்திரனின் களவு குறித்து தெளிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டோம்.

மஹேந்திரனை பராளுமன்றிற்கு அழைத்து வருவதாக உறுதி வழங்கினார்கள். அவரை கொண்டு வந்து நிறுத்தினால் நானும் பதிலளிப்பேன் என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Mahinda responds New York Times article,Mahinda responds New York Times article