வயோதிப தாயிற்கு எமனான சிறுவன் : இரணைமடுக்குளத்தில் சம்பவம்

0
854
kilinochchi iranamadu kulam accident

இரணைமடுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.(kilinochchi iranamadu kulam accident, Tamilnews)

சாரதி அனுமதிப்பத்திரமின்றி 17 வயதுடைய சிறுவன் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியா, கூமாம்குளம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வீரவாகு புரணம் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள தனது மகளது வீட்டிலிருந்து வவுனியாவுக்கு செல்வதற்காக இரணைமடு வீதிக்கு வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்களில் மோதியதில் படுகாயமடைந்த அப் பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான சிறுவனை கைதுசெய்துள்ள பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:kilinochchi iranamadu kulam accident,kilinochchi iranamadu kulam accident,