தமிழர்களுக்கு தலைவர் தேவையில்லை சர்வாதிகாரியே தேவை!

0
408

கலாநிதி சந்திரசேகரம் பரமலிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர் இறைமை என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், தமிழர்களுக்கு இனிமேல் தலைவர் தேவையில்லை, நல்ல நிர்வாகியே தேவை என தெரிவித்துள்ளார். North Province Council Member G T Linganathan Statement

இதன்போது அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

எழுபது ஆண்டுகளாக நாங்கள் பெற்ற அனுபவங்களை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. முதலில் எமக்கான நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளவேண்டும்.

அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் போது தான் காணாமல் போனோர், காணி விடயம், சிறையிலே இருப்பவர்களின் பிரச்சனைகள், வடகிழக்கு இணைப்பு, மொழிப்பிரச்சினை, மதப்பிரச்சினை அனைத்தையும் தீர்த்துக்கொள்ள முடியும்.

இதனை எம்மவர்கள் எழுபது ஆண்டுகளாக செய்கின்றார்கள் இன்னும் முடியவில்லை. இன்னும் எத்தனை தீபாவளி முடியப்போகின்றதோ அல்லது எத்தனை தைப்பொங்கல் வரப்போகின்றதோ யாருக்கும் தெரியாது.

நான் ஒன்றை துணிந்து சொல்வேன் தமிழர்களுக்கு இனிமேல் தலைவர் தேவையில்லை, நிர்வாகியே வேண்டும் நேர்மையான ஒரு சர்வாதிகாரியான நிர்வாகியே வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites