அமெரிக்காவில் தவறுதலாக சுட்ட சிறுவன்! 2 வயதுக் குழந்தை பலி

0
346
Mistaken boy United States 2 year child kills

அமெரிக்காவில் 4 வயது சிறுவன் கைத்துப்பாக்கியை எடுத்து விளையாடும் போது கைதவறி தவறுதலாக சுட்டதில் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தாள். (Mistaken boy United States 2 year child kills)

இந்த நிலையில் அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் சான் பெர்னார்டினோ என்ற இடத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் பதற வைப்பதாக அமைந்து உள்ளது.

அங்கு உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுவன் ஒருவனிடம் கைத்துப்பாக்கி கிடைத்தது. அதை வைத்து அவன் விளையாடிக்கொண்டு இருந்தபோது தவறுதலாக விசையை அழுத்தி சுட்டு விட்டான். அதில் குண்டு பாய்ந்து 2 வயது பெண் குழந்தை இரத்த வெள்ளத்தில் விழுந்தது. அந்தக் குழந்தை, அவனது நெருங்கிய உறவுக்குழந்தை.

குண்டு பாய்ந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் சிகிச்சை பலனளிக்காது குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.

அத்துடன் 4 வயது சிறுவன் கையில் கிடைக்கிற அளவுக்கு துப்பாக்கியை கவனக்குறைவாக கைக்கு எட்டும் இடத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், அவனது தாத்தா சீசர் லோபெஸ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

tags :- Mistaken boy United States 2 year child kills
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்