நேற்று பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்வி அடைந்தது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 126 எம்பிக்களும், எதிராக 325 எம்பிக்களும் வாக்களித்தனர். இதில் அதிமுகவின் 37 எம்பிக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த அதிமுகவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் , நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு ஆதரவாக உள்ள கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த அதிமுகவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்