மட்டக்களப்பில் 68250 ஹெக்­டேயர் காணி சீனாவுக்கு! போர் கொடி தூக்கிய யோகேஸ்­வரன்!

0
462

மட்­டக்­க­ளப்பு குடும்­பி­ம­லையில் 68250 ஹெக்­டேயர் காணியை கரும்புச் செய்­கைக்­காக சீன அர­சாங்­கத்தின் கம்­ப­னி­யொன்­றுக்கு வழங்­கு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். Batticaloa 68250 Hectare Land china Sugarcane Issue

இது தொடர்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதிபர் மா. உத­ய­கு­மா­ருக்கு புதன்­கி­ழமை அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கோற­ளைப்­பற்று தெற்கு (கிரான்), ஏறா­வூர்­பற்று (செங்­க­லடி) ஆகிய பிர­தேச செய­லாளர் பிரிவுகளை மைய­மாக கொண்­ட­தான குடும்­பி­மலை பகு­திக்கு அண்­மித்த 68250 ஹெக்­டேயர் காணியை இலங்கை அர­சாங்கம் யாருக்கும் தெரி­யாமல் சீன அர­சாங்க கம்­பனி ஒன்­றுக்கு கரும்புச் செய்­கைக்கு வழங்க இர­க­சிய ஒப்­பந்தம் ஒன்றை மேற்­கொண்­டுள்­ளது என சில ஆதா­ரங்­க­ளுடன் அறிந்­துள்ளேன்.

இதே­வேளை கரும்புச் செய்­கை­யா­னது நில வளத்தை பாதிப்­ப­துடன், எதிர்­கா­லத்தில் மக்கள் பஞ்­சத்தில் வாழ வழி­யேற்­ப­டுத்தும்.

எனவே இத்­திட்­டத்தை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அமுல்­ப­டுத்த அனு­ம­திக்க முடி­யாது. மாவட்ட அபி­வி­ருத்திக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இச்­செ­யற்­பாடு சார்­பாக ஆராய்­வ­தற்கு இணைத்துக் கொள்­ளு­மாறு கேட்டுக்கொள்­கின்றேன் என குறிப்­பி­ட்­டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites