ஆகஸ்ட் 17 இல் கூட்டு எதிரணியின் மாபெரும் பேரணி!

0
383
Joint Opposition Party Organize Mass Protest March August 17

கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன இளைஞர் முன்னணி என்பன இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன. Joint Opposition Party Organize Mass Protest March August 17

எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டப்பேரணி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இதுவரையில் கண்டிராத பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டமொன்றை இதன்போது கூட்டவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அண்மைய காலமாக நல்லாட்சி அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites