இராணுவத்தினரால் கைது செய்யயப்பட்டு பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில், அவர்களது உறவினர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது. Government Missing People Office Inquiring Military Officers
இதன்படி இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகள் இடம்பெறும்.
இந்நிலையில் உறவினர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டுவருவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
எனினும் உடனடியாக அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியாது எனவும், அதற்கென முறையான திட்டமொன்று அவசியமெனவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி கட்டளைத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயமசூரிய மற்றும் 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரிடம் இறுதி யுத்தத்தின்போது பலர், பாதுகாப்புத் தரப்பிடம் சரணடைந்தனர்.
இந்த நிலையில், காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் கருத்து தொடர்பில் பெருமை அடைகின்றேன்; ஞானசார தேரர்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்