இனி பயோ சிப் மூலம் தான் எல்லா வேலையும் நடக்கும் – சுவீடன் மக்கள்!!

0
559
Bio chip work Sweden people
image001.jpg

உலகிலேயே ஸ்வீடன் நாட்டில்தான் பயோ சிப்புடன் அதிக மக்கள் வலம் வருகிறார்கள். கடந்த சில நாட்களில் மட்டும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 3500 பேர் தங்கள் கைகளில் பயோ சிப் பொருத்தி இருக்கிறார்கள் என அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஸ்வீடனில் பயோ சிப் பொருத்துவது கட்டாயப்படுத்தப்படவில்லை என்றாலும், அங்கிருக்கும் பலரும் இந்த பயோ சிப் கலாசாரத்தை பின்பற்றுகின்றனர். Bio chip work Sweden people

ஸ்வீடன் பிரஜைகள் தங்கள் அரசின் மீது தீவிர நம்பிக்கை வைத்திருப்பதோடு எந்தவொரு தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் முதன்முதலில் ஏற்கக் கூடியவர்கள். இது ஒரு டிஜிட்டல் நாடெனவே கூறலாம்.

மேலும் ஸ்வீடனில் மட்டும் செல்லுபடியாகக் கூடிய ‘இ- க்ரோனா” என்ற இலத்திரனியல் பணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்வீடனில் செயல்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்று, தம் ஊழியர்கள் எல்லோரும், கைகளில் பயோ சிப் பொருத்த வேண்டும் என்று அறிவித்ததை அடுத்து பயோ சிப்பினை பொருத்திக் கொண்டனர்.

இந்த பயோ சிப் ஆனது கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் பொருத்தப்படுகிறது. இதற்காக மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனை எப்போது வேண்டுமானாலும் நீக்கியும் கொள்ளலாம்.

இந்த பயோ சிப் ஒரு அடையாள அட்டை போன்றது. டிக்கெட் எடுப்பது, பாஸ்போர்ட், என எல்லா விதமான விடயங்களும் இதில் அடங்கியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் எந்தவொரு இடங்களிலும் பயன்படுத்தலாம்.

tags :- Bio chip work Sweden people
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்