தயவு செய்து என்னை படிக்க உள்ளே விடுங்க – ஒன்றாம் வகுப்பு மாணவன்!

0
463
leave read - 1 class student tirupur

திருப்பூர் அங்கேரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார், தனது மகன் காந்திஜியை, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கட்டாய இலவச கல்விச் சட்டத்தில் சேர்த்துள்ளார். ஒன்றாம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை, பள்ளி நிர்வாகம், கல்விக்கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி வெளியே அனுப்பி உள்ளது.leave read – 1 class student tirupur

இதனையடுத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு வெளியே அனுப்பியதால், அதை கேட்க வந்த தந்தையின் இருசக்கர வாகனத்தின் சாவியையும், பள்ளி நிர்வாகம் பிடுங்கி வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவரும், அவரது தந்தையும், பள்ளிக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாந்தியிடம் கேட்டபோது, கல்விக்கட்டணம் மட்டுமே அரசு செலுத்தும் எனவும், பள்ளி விதிமுறைகளின்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

More Tamil News

Tamil News Group websites :