எதற்கும் அசையாத தஞ்சை பெரிய கோவில் கோபுரத்திற்கு என்ன நடந்தது?

0
420
thanjai big temple Thunderstorm effected

(thanjai big temple Thunderstorm effected)

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் தஞ்சை பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.  இதனால், கோபுரத்தின் உச்சியில் கலசங்கள்  அமைக்கப்பட்டுள்ள இடத்தில், சுதைச் சிற்பமான  வலதுபுற  கீர்த்தி  முகத்தில்  சிறுபகுதி சேதமடைந்தது.  அந்த கோபுரத்தில்  இடி  தாங்கி  இருந்ததால்  பெரும்  சேதம்  தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் ,  சேதமடைந்த  பாகங்கள் கோபுரத்தின் உச்சியிலேயே  சிதறின. இதில்,  சில கற்கள் கீழே விழுந்தன, அப்போது,  இக்கோபுரத்தின் அருகில் உள்ள காலணி வைப்பகத்தில் குளிர்சாதனப் பெட்டியில் தீப்பொறி  ஏற்பட்டதுடன்,  மின்  தடையும் ஏற்பட்டது.

இதே போல் கடந்த 2010 ம் ஆண்டு ராஜராஜன் நுழைவு வாயிலில் இடி தாக்கி கலசம் சேதமடைந்தது. பெரிய கோயிலில்  இடி விழுந்த சம்பவம் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதுமட்டுமல்லாமல்  2011ம்  ஆண்டு  பெருவுடையார்  சன்னதியில்  இடி  தாக்கி  விரிசல்  ஏற்பட்டது  என்பது  குறிப்பிடத்தக்க  விடயமாகும்.

tags;-thanjai big temple Thunderstorm effected

More Tamil News

Tamil News Group websites :