மண்ணுக்காகவும், இனத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்தியாகம் செய்த மாவீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவுகூருகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மாவீரர்களை நினைவு கூர்ந்தார்.
அத்துடன் விக்ரமசிங்க-சம்பந்தன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.