கண்டி, ஆலதெனிய பிரதேசத்தில் செல்ல நாய் ஒன்றினால் இழந்த பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நாய் வீதியில் இருந்து மீட்டெடுத்த சிறிய பணப்பை ஒன்றில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியும் 7,000 ரூபா பணமும் இருந்தது.
உரியவரிடம் ஒப்படைப்பு
அதனை கண்ட வீட்டு உரிமையாளர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த சம்பவமொன்று கண்டி அலதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அலதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்துகஹமட பகுதியில் நாய் ஒன்று பணப்பையை பறித்துள்ளது. அப்போது அந்த பை சாலையோரம் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு வளர்க்கப்படும் நாய் அடிக்கடி காலணிகளை கவ்விக்கொண்டு வருமென என நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் அந்த நாய்கொண்ட வந்த மேற்படி பணப் பையை பரிசீலித்த போது அதில் பணம் மற்றும் தங்கச் சங்கிலி என்பன காணப்பட்டுள்ளள.
மேலும் அந்த பையினுள் காணப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை எடுத்த போது அது அக்கிராமத்தில் அயலில் உள்ள ஒருவர் என்றும் அவர்களது பணப்பை காணாமல் போனமையும் தெரியவந்துள்ளது.
பின்னர் அலதெனிய பொலிஸ் நிலையத்தில் மேற்படி சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்து பணத்தையும் தங்க நகையையைும் மீள ஒப்படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.