பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
வன்முறை எதற்கும் தீர்வாகாது மற்றும் எதிர்விளைவு தரும். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்ததில் இருந்து எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இதை எப்படியும் மன்னிக்க முடியாது. தயவு செய்து இப்போது வன்முறையை நிறுத்துங்கள்.