கைப்பற்றப்படும் போதைப் பொருளினை உடன் அழிக்கும் வகையில் சட்டங்களை கொன்டு வருவது தொடர்பில் புதிய சட்ட நடைமுறைகளை கொன்டுவருவது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானத்தை ஈர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். New Rule Enforce Destroy Captured Drugs Tamil News
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போதுள்ள சட்ட திட்டங்கள் பிரகாரம், போதைப் பொருள் சுற்றி வலைப்புக்களில் கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் வழக்குப் பொருளாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இதனூடாக கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளது.
அத்துடன் வழக்கு நிறைவடையும் வரை பாதுகாத்து வைக்கப்பட வேண்டியும் உள்ளது. இவ்வாறான பின்னணியில் அந்த போதைப் பொருள் மீள சமூகத்துக்குள் பரவ வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
எனவே கைப்பற்றப்படும் போதைப் பொருளினை உடன் அழிக்கும் வகையில் சட்டங்களை கொன்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
கைப்பற்றப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கிறது என மக்கள் கேட்கின்றனர். அதனால் போதைப் பொருட்களை கைப்பற்றியதும் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னர் அவற்றை அழிக்க நடவடிக்கை வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- பொகவந்தலாவையில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
- வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்