கைப்பற்றப்படும் போதை பொருளை உடனே அழிக்க வருகிறது சட்டம்!

0
461

கைப்பற்றப்படும் போதைப் பொருளினை உடன் அழிக்கும் வகையில் சட்டங்களை கொன்டு வருவது தொடர்பில் புதிய சட்ட நடைமுறைகளை கொன்டுவருவது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானத்தை ஈர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். New Rule Enforce Destroy Captured Drugs Tamil News

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதுள்ள சட்ட திட்டங்கள் பிரகாரம், போதைப் பொருள் சுற்றி வலைப்புக்களில் கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் வழக்குப் பொருளாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இதனூடாக கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளது.

அத்துடன் வழக்கு நிறைவடையும் வரை பாதுகாத்து வைக்கப்பட வேண்டியும் உள்ளது. இவ்வாறான பின்னணியில் அந்த போதைப் பொருள் மீள சமூகத்துக்குள் பரவ வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

எனவே கைப்பற்றப்படும் போதைப் பொருளினை உடன் அழிக்கும் வகையில் சட்டங்களை கொன்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

கைப்பற்றப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கிறது என மக்கள் கேட்கின்றனர். அதனால் போதைப் பொருட்களை கைப்பற்றியதும் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னர் அவற்றை அழிக்க நடவடிக்கை வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites