(CCTV video Kuwait couple fought permit pet dog Sri Lanka)
தமது செல்லப்பிராணியான நாயை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு போராடிய குவைட் தம்பதியர் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி வெளியானது.
இந்த சம்பவத்தின் போது 5 சுங்க அதிகாரிகள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
விசாரணைகள் நிறைவடையும் வரை குவைட் நாட்டவர் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.
முதலில் இலங்கை சுங்க அதிகாரிகள் குறித்த குவைட் பெண்ணை தாக்கியதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
இந்த காணொளியை அவதானிக்கும் போது குவைட் பெண் வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கும் அதிகாரி மீது தாக்குதல் நடத்துகின்றமை புலப்படுகிறது.
ஆனால், குறித்த தம்பதிகள் மீது சுங்க அதிகாரிகள் வன்மையான வார்த்தைகளை பிரயோகித்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதனாலேயே அவர்கள் சினம் கொண்டு அதிகாரிகளை தாக்கினார்களா என்ற ரீதியில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
காணொளி ஆதாரம் சுவர்ணவாஹினி
(CCTV video Kuwait couple fought permit pet dog Sri Lanka)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- பொகவந்தலாவையில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
- வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்