ஜனாதிபதி மைத்திரியின் தவறால் பிரச்சனைகள் எழுகின்றன – பொது எதிரணி குற்றச்சாட்டு

0
355
Maithripala Sirisena calls himself executive president not leader

(Maithripala Sirisena calls himself executive president not leader)

தம்மை நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி என அழைத்துக் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றிருக்கக்கூடாது.

ஜனாதிபதியின் இந்த தவறான தீர்மானத்தினால் தற்போது எதிர்க்கட்சி தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக ஒன்றிணைந்த பொது எதிரணி தெரிவித்துள்ளது.

பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மக்களின் வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டவர்.

அவர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையே நாடாளுமன்றில் பேசி வருகிறார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

(Maithripala Sirisena calls himself executive president not leader)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites