கொட்டகலை ரொசிட்டா பிரதான நகரத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றின் மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (CCTV broke camera Money robbery)
குறித்த கொள்ளை சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சிசிரிவி கமராவின் பதிவு உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பலசரக்கு கடையில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியவர் நூதனமான முறையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை இயக்கவிடாமலும், உடைத்தெறிந்தும் விட்டு கடைக்குள் நுழைந்து மிகவும் சூட்சமான முறையில் கடையில் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்ற கடை உரிமையாளரின் முறைபாட்டை ஏற்று சம்பவ இடத்திற்கு சென்ற திம்புள்ள பத்தனை மற்றும் நுவரெலியா விசேட பொலிஸின் கைரேகை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
tags :- CCTV broke camera Money robbery
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- விண்வெளிப்படையை அமைக்க உத்தரவிட்ட அதிபர் டிரம்ப்! அப்போ ஏலியன்கள் உண்மை தானே?
- பிக் பாஸ் முடிவில் கிடைக்கும் லாபம் எவ்வளவு தெரியுமா..? : 1,140 கோடியாம்..!
- முஸ்லிம்களினால்தான் பொதுபலசேனா தோன்றியது!!
- 70 அரச நிறுவனங்கள் முஸ்லிம் அமைச்சர்கள் வசம் – மனோ!!