முகமாலையில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு

0
44

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பல மனித எலும்புக்கூடுகளுடன் சீருடையையும் இன்று கண்டெடுத்துள்ளனர். 

இதுபற்றி அவர்கள் பளை பொலிஸில் முறைப்பாடளித்ததையடுத்து, பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தினர். 

கிளிநொச்சி நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் குறித்த இடத்தில் மேலதிக அகழ்வு பணிகளை நாளை திங்கட்கிழமை (29) மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.