உபுல் சாந்த கைது

0
41

திரைப்படம் தயாரிப்பதாக கூறி ஒருவரிடம் 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மூத்த உயர்தர சிங்கள போதகர்  உபுல் சாந்த சன்னஸ்கல கடான பொலிஸாரால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடனா பிரதேசத்திலுள்ள ஒருவரிடம் இருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் கொடுப்பதாக உறுதியளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், குறித்த திகதியில் சந்தேகநபர் பணத்தை வழங்க தவறியமையினால், நம்பிக்கை மீறல் காரணமாக, பணத்தை வழங்கிய நபர் கடான பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி செயற்பட்ட கடனா பொலிஸார் சந்தேக நபரை உடனடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (25) வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

களனி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜே.ஒய்.பி. கிரிஷாந்தவின் பணிப்புரையின் பிரகாரம் கடான பொலிஸ் பரிசோதகர் காமினி ஹேவாவிதாரண தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன..