முதியோர் இல்லத்தில் நடந்த கொடூரம்; ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்திய பெண்

0
36

முதியோர் இல்லமொன்றின் பெண் ஒருவர் முதியவர் ஒருவரை ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தும் காணொளி வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகளை பேணி காக்கும் பெற்றோகள் அவர்களை வளர்த்து ஆளாக்க பெரும் கஸ்டப்படுகின்றனர். பிள்ளைகள் வளர்ந்து ஆளானதும் தம்மை நன்றாக கவனித்து கொள்வார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு எல்லா பெற்றோரிடமுமே உள்ளது.

ஒருகாலத்தில் தாத்தா, பாட்டி, பேரன் பேத்தி , பெற்ரோர்கள் பிள்ளைகள் என இரண்டு மூன்று தலைமுறையே வீடுகளில் கூடி வாழ்ந்தவர்கள் தான் எமது மூதாதையர்கள் .

ஆனால் இன்றைய காலத்தில் பெற்றோர்களை வயதான காலத்தில் பராமரிப்பதை பிள்ளைகள் சுமையாக நினைக்கும் கொடுமையான காலமாக மாறிவிட்டது. அதனால் தானோ என்னவோ முதியோர் பராமரிப்பு இல்லங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளதுடன், வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொண்டும் பல முதியோர் இல்லங்கள் முளைத்துவிட்டன.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாரம் என எண்ணாது எப்படி போற்றி காத்தார்களோ அதேபோல பிள்ளைகளும் தம் பெற்றவர்களை பாரமாக எண்ணி முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாது , அவர்களையும் தமது இல்லத்தில் சேர்த்து மகிழ்ச்சியுடன் வாழ்தலிலேதான் வாழ்வின் முழுமை அடங்கியுள்ளது.