அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து: ஆம் ஆத்மி கட்சி அச்சம்

0
48

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

திகார் சிறையில் இரு குழுக்களிடையே நடந்ததாகக் கூறப்படும் மோதலுக்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சியினர் இவ்வாறு கூறியுள்ளனர்.

கலால் கொள்கை வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உயிரோடு விளையாடுகிறார்கள் என அந்தக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் திங்கட்கிழமை மாலை கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது.

அரசியல் அழுத்தத்தின் கீழ் திகார் சிறை நிர்வாகம் தனது நீரிழிவு நிலை குறித்து தவறான அறிக்கையை வெளியிட்டதாக ஆம் ஆத்மி தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.

கெஜ்ரிவாலை பரிசோதிக்கவும், அவரது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க இன்சுலின் தேவையா என்பதை தீர்மானிக்கவும் ஒரு மருத்துவ குழுவை நியமிக்கவும் எய்ம்ஸுக்கு நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலால் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மாதம் 21 ஆம் திகதி அமலாக்கத்துறை குழுவால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.