பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ; 3 சந்தேக நபர்கள் கைது!

0
33

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி பிட்டிகல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட  ஹொரங்கல்ல, நியாகம பகுதியில் இருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் பொரலஸ்கமுவ , ரத்னபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 , 24 மற்றும் 31 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.