ஈரானுக்கு ஜோ பைடனிடம் இருந்து சென்ற அவசர செய்தி

0
37

இஸ்ரேல்-ஈரான் மோதலில் அளவிற்கு மீறி இஸ்ரேலை தாக்க வேண்டாம் என்றும் தாங்கள் இரும்பு கவசமாக இருப்போம் என்றும் ஜோ பைடன் ஈரானுக்கு தெரிவித்துள்ளதாக என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், சவுதி அரேபியா,கட்டார்,குவைத்,ஈராக் மற்றும் சிரியா-லெபனான் எல்லை என அனைத்து பகுதிகளிலும் அமெரிக்க தளங்களும் உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.

அமெரிக்கா இஸ்ரேலை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் இந்த யுத்தம் ஒரு அளவிற்கு மேல் போக கூடாது என எண்ணுகின்றது.

இந்த போர் நீண்டால் அது உலகத்தில் எண்ணெய் விலைகளை கூட்டி மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் மத்திய கிழக்கு முழுவதும் மோதலால் எரியும் என்றால் அதை அமெரிக்காவால் கூட கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.