சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன காலமானார்!

0
15

சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன இன்றையதினம் (16-04-2024) மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 92 வது வயதில் காலமானார்.

மேலும், 1931 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி காலி மாவட்டத்தின் உனவடுன பிரதேசத்தில் பிறந்த ஆரியரத்ன இலங்கை அரசியலிலும் சமூக அபிவிருத்தியிலும் தொடர்ச்சியான செயற்பாட்டாளராக அறியப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.