மூன்று விதமாக இடம்பெற்ற கொலைகள்!

0
34

கத்தி மற்றும் கத்தரிக்கோலால் குத்தப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக 37 வயதுடைய ஒருவரே நேற்று (14) கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திப்பட்டுவாகம விகாரைக்கு செல்லும் வழியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஹக்மன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹட்டகஹகொரட்டுவ பகுதியில் இன்று (15) அதிகாலை 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் சேருநுவர, மஹாவெலிகம பிரதேசத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.