மதவாச்சி தாக்குதல் – கருத்து வௌியிட்ட பொலிஸ் மா அதிபர்!

0
43

மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதலினால் இளைஞன் ஒருவரின் விரை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் கருத்து  வௌியிட்டுள்ளார்.

ஹொரணை – ஒலபொடுவ ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருக்கும் போது எல்லை மீறி பலத்தை பயன்படுத்தினால், அதனை அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.”

“குற்றம் சாட்டப்பட்டவர்கள், சட்டவிரோத போதைப்பொருள், மதுபானம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட முந்தைய பல குற்றங்களுடன் தொடர்பு கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.” என்றார்.