“பாஜக தமிழகத்தில் நாடாகமாடுகின்றது”: பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய மு.க.ஸ்டாலின்

0
62

பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும், அது அவ்வளவும் தனது திமுகவிற்கு பெரும் பலனாக அமையும் என அந்த கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேர்காணலின் போது பிரதமர் மோடியை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து “ஏதேதோ உளறுகின்றார் பொய் சொல்கிறார்” என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தமிழகத்தில் பொய்களை மட்டுமே பரப்புகின்றார். பாஜக தமிழகததில் பெரும் நாடகம் ஆடுகின்றது. தமிழகத்தில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்றது.

இந்நிலையில், எதிர்க்கட்சி பதவிக்கு பாஜகவும், அதிமுகவும் போட்டியிடுகின்றன. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி முழுமையாக வெற்றிறை தனதாக்கிக் கொள்ளும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம், எங்களின் புதிய திட்டங்கள் பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதேவேளை பாஜக மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சுமத்தியுள்ள திமுகவின் குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் முற்றாக மறுத்துள்ளார்.

உண்மை என்ன என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். யார் ஊழல் செய்துள்ளார்கள் என்பதை மக்கள் நன்று அறிந்து வைத்துள்ளார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.