மே மாதத்துக்குப் பின் வாருங்கள்; தேடி சென்றவர்களை திருப்பி அனுப்பிய சந்திரிகா!

0
58

ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மே மாதத்துக்குப் பின்பே தேர்தல் விடயங்கள் சூடு பிடிக்கும் என்றும், அப்போது கூட்டணி அமைப்பது தொடர்பில் செயலில் இறங்குவதே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியதாகவும் தெற்கு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.