100 லட்சம் வாக்குகளைப் பெற்று வெல்லப்போகும் ரணில்

0
72

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் எனவும் அத்தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 100 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த அதிபர் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சியால் நடத்தப்பட்ட முதலாவது பொதுக்கூட்டம் நிதர்சனம் எனும் தொனிப்பொருளின் கீழ் குருணாகல், குளியாபிட்டியவில் நடைபெற்றது.

இலங்கை வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி அடைந்தபோதெல்லாம் இந்நாடும் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதே உண்மை, பொய்கள் மூலமே ரணில் விக்ரமசிங்க தோற்கடிக்கப்பட்டார். 2020 பொதுத்தேர்தலின் போதும் உண்மை தோற்கடிக்கப்பட்டது, ஆனால் அதன்பின்னர் உண்மை வென்றது.