நெடுந்தீவு, காங்கேசன்துறை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது!

0
88

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு, காங்கேசன்துறை பகுதியில் வைத்து நேற்று (2024.03.09) இரவு 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடனும், காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒரு படகுடனும் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலதிக நடவடிக்கைகளை நீரியல்வள திணைக்களத்தினர் மேற்கொள்வார்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.