பல மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக பொதுவெளியில் இளவரசி கேட் மிடில்டன்

0
100

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், பல மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக பொதுவெளியில் காணப்பட்டுள்ளார்.

விவாகரத்து உட்பட வதந்திகள்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வயிறு தொடர்பான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது முன்னரே திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்று கென்சிங்டன் அரண்மனை ஜனவரி 17 அன்று அறிவித்தது.

ஆனால் அறுவை சிகிச்சை தொடர்பான மேலதிக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. மட்டுமின்றி, அதன் பின்னர் பொதுவெளியில் அவர் தென்படவே இல்லை. இதனால் விவாகரத்து உட்பட வதந்திகள் வெளிவரத் தொடங்கின.

மட்டுமின்றி, அரண்மனை அதிகாரிகளும் கேட் மிடில்டன் தொடர்பில் விளக்கமளிக்கவும் தாமதப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், தாயாருடன் கேட் மிடில்டன் காணப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடுமையான விமர்சனம்

அத்துடன், வழக்கத்திற்கு மாறாக அவர் எவ்வித பாதுகாப்பு அதிகாரிகளும் இன்றி காணப்பட்டுள்ளார். வேறு குடும்ப உறுப்பினர்களும் அவருடன் காணப்படவில்லை. கேட் மிடில்டன் நலமாக இருக்கிறார் என்று மட்டுமே இதுவரை அரண்மனை தரப்பில் இருந்து வெளியான தகவல்.

கடந்த வாரம் சமூக ஊடக வதந்திகளுக்கு எதிராக கென்சிங்டன் அரண்மனை கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. மேலும், அரண்மனையின் உத்தியோகப்பூர்வ சமூக ஊடகங்களிலும் முறையான தகவல் இல்லை என்பதே வதந்திகளுக்கு காரணமாக அமைந்தது.