பெரு நாட்டில் பொலிஸார் வினோதமான முறையில் சந்தேக நபர்களை கைது செய்யும் காட்சி இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
நேற்றுமுன் தினம் (14-02-2024) காதலர் தினத்தையொட்டி டெடிபெயாரை போல் உடுத்திக் கொண்டு ப்ரபோஸ் செய்யும் நோக்கில் சென்று பலரை கைது செய்கின்றனர்.
இந்த வித்தியாசமான சுற்றிவளைப்பின் போது, பெருந்தொகையான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெரு நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காண்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், இதன் மூலம் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமையானது பாராட்டத்தக்கது என பொலிஸ் உயர் அதிகாரிகளும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல் கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று குற்றவாளிகளை பிடிக்க இதே போன்ற தந்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும், அங்கு அதிகாரி ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு சந்தேக நபர்களை கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
🧸💔| Efectivos del #GrupoTerna, Región Policial Lima, uno de ellos mimetizado de osito de peluche cariñosito, capturaron en San Martín de Porres a dos microcomercializadoras de droga.
— Policía Nacional del Perú (@PoliciaPeru) February 14, 2024
Se comisó más de 1000 envoltorios conteniendo PBC.
¡Si te quiere, no te deja delinquir! pic.twitter.com/SxEvex08qc