சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு வழங்கிய அதிரடி உத்தரவு!

0
368

இஸ்ரேல் காசாவில் மேற்கொள்ளும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் நேற்றையதினம் (26-01-2024) தீர்பளித்துள்ளது.

பலஸ்தீனர்கள் இனப் பேரழிவு நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு வழங்கிய அதிரடி உத்தரவு..! | Action Order Given Israel By International Court

இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கி விட்டதுடன் 1.9 மில்லியன் மக்களை தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றிய நிலையில் குறைந்தது 25,900 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.