முடி செழித்து வளர உதவும் எண்ணெய்

0
113

ஒரு பெண்ணிற்கான அழகை தருவது அவளது கருமையான முடியாக தான் இருக்கும். தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதற்கும் ஒரு பெண் தன்னால் முடிந்தவரை ஒரு சில முயற்சிகளை கட்டாயம் எடுக்க வேண்டும்.

வீட்டில் உள்ள பொருட்களான கடுகு எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் முடியை பராமரிக்கலாம்.

அந்தவகையில் 3 முதல் 6 மாதங்களில் முடி செழித்து வளரவும் கருமையாக இருக்கவும் என்ன செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கடுகு எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • ரோஸ்மேரி இலை
  • வெந்தயம்
  • பாதாம் எண்ணெய்
  • விளக்கெண்ணெய்
முடி செழித்து வளர இனி வீட்டிலேயே எண்ணெய் செய்யலாம்! | Homemade Oil For Hair Growth In Tamil

செய்முறை

  • முதலில் கடுகு எண்ணெயை சூடுப்படுத்திக்கொள்ளவும்.
  • அடுத்து அதில் ரோஸ்மேரி, கறிவேப்பிலை, வெந்தயத்தை வறுத்துக்கொள்ளவும்.
  • பின் அடுப்பில் சூடாக்கிய எண்ணெய்யை ஒரு பாத்தலில் சேர்த்துக்கொள்ளவும்.
  • இறுதியாக பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சமமான சேர்க்கவும்.

ஏற்படும் நன்மைகள்

  • கடுகு எண்ணெயில் ஆல்பா ஃபேட்டி ஆசிட் உள்ளது.
  • இது முடியில் ஈரப்பதத்தை தக்கவைத்து, முடியின் வேர் முதல் நுனி வரை ஊடுருவி செல்கிறது.
  • வெந்தயத்தில் அதிக புரதம் மற்றும் வைட்டமின் பி3 இருகிறது. இது முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும். பொடுகு தொல்லையை போக்கும்.
  • கறிவேப்பிலை முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது.
  • விளக்கெண்ணெய் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • பாதாம் ஆயிலில் வைட்டமின் ஏ, டி மற்றும் இ போன்ற கொழுப்பு கரையும் வைட்டமின்கள் இருகிறது. இது முடி முழு ஊட்டச்சத்துடன் இருப்பதற்கு உதவுகிறது.