ராமர் கோவில் திறப்பு நாளுக்காக காத்திருக்கும் பல கர்ப்பிணிகள்!

0
181

இந்தியாவின் அயோத்தியில் ஜனவரி 22ஆம் திகதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் ராமர் கோவில் திறக்கப்படும் அதேநாளில் தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளில் விண்ணப்பம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ராமர் கோவில் திறப்பு தினத்தில் பிரசவமாக வேண்டும் என அறுவை சிகிச்சைக்காக உத்தரப்பிரதேச மருத்துவமனையில் விண்ணப்பங்கள் குவிய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமர் கோவில் திறப்பு நாளிற்காக காத்திருக்கும் பல கர்ப்பிணிகள்! | Pregnant Women Waiting Opening Day Of Ram Temple

ஜனவரி இரண்டாவது வாரத்துக்கு பின் பிரசவ திகதியில் உள்ள 35 பெண்கள் ராமர் கோவில் திறப்பு தினத்தன்று குழந்தை பெற ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அன்றைய தினத்தில் அதிக பிரசவங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இந்த முடிவை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். 

ராமர் கோவில் திறப்பு நாளிற்காக காத்திருக்கும் பல கர்ப்பிணிகள்! | Pregnant Women Waiting Opening Day Of Ram Temple