பொதுஜன பெரமுனவின் அரசியல் தீர்மானங்களுக்கும் எமது குடும்பத்திற்கும் தொடர்பில்லை: மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை

0
129

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன எடுக்கும் எந்தவொரு அரசியல் தீர்மானத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதில்லை. தேவையற்ற பொய்யான அறிக்கைகளால் மக்களை ஏமாற்ற வேண்டாம்.

கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து ராஜபக்ச குடும்பத்தினர் அறிக்கைகள் வெளியிடுவதில்லை. எடுக்கப்படும் அரசியல் முடிவுகள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

எனது உறவினர்களின் கருத்துக்களுக்கு கட்சி பொறுப்பேற்காது. ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுப்படும் கருத்துகளுக்கும் நாம் பொறுப்பேற்ற முடியாது. தேவையற்ற கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.