“மனித நேயத்துக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்ட தே.தி.மு.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மறைவு பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிக்கின்றது என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்தியில் மேலும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சுகவீனமுற்றிருந்த தே.தி.மு.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்பி மக்கள் சேவையை புத்தெழுச்சியுடன் ஆரம்பிப்பார் என்றல்லவா எதிர்பார்த்து காத்திருந்தோம்.
அவரின் நலனுக்காக இறைவனை பிரார்த்தித்தோம். ஆனால் கால சக்கரம் அவரை தன்னிடம் அழைத்துக் கொண்டுள்ளது. விஜயகாந்தை பற்றி குறிப்பிடுவதாக இருந்தால் அவர் ஒரு புதிய வரலாறு. ஓரிரு வார்த்தைகளில் அதை எடுத்துக்கூற முடியாது.
மறைந்த எமது தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுடன் நட்பில் இருந்தவர். இலங்கை மக்களுக்காக குரல் கொடுத்தவர். தான் கால்வைத்த துறைகளில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டியவர். எளிமையையும், மக்கள் சேவையும் தான் அவரின் வலிமை.
இவரின் இழப்பால் வாடும் மனைவி, பிள்ளைகள், கட்சி தொண்டர்கள், இரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா இளைப்பாறட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.