இரணைமடுவால் 8000ஏக்கர்க்கும் மேற்படட விவசாயநிலங்கள் பாதிப்பு!

0
131

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றத்தினால் சுமார் எண்ணாயிரம் ஏக்கர் வரையான நெற்பயிர்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் அழிவடைந்துள்ளதுடன்,ஒவ்வெரு விவசாயிகளும் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 300 ரூபா இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதில் இரணைமடுக் குளத்தின் கீழ் உள்ள தாழ்நிலப் பகுதிகளான பண்ணங்கண்டி, முரசுமோட்டை, ஐய்யன் கோவிலடி, பழைய வட்டக்கட்சி, கண்டாவளை போன்ற பகுதிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக வெள்ளத்தில் மூழ்கின.

இதேவேளை சரியான பொறிமுறைகள் எதுவுமின்றி குளத்தில் நீரைத்தேக்கி வைத்து பொறுப்பற்ற வகையில் அதிக அளவில் திறந்து விடுவது என்பது அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலலென பலரும் குற்றம் சாட்டியிருந்தனர்