சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் நாட்டில் பதிவான கொவிட் மரணம்

0
188

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர்  உறுதிப்படுத்திய கொவிட் மரணம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று பதிவாகியுள்ளது. கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாகவும், எனினும் கோவிட் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து  இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

இலங்கையில் மீண்டும் பதிவான கொரோனா மரணம்! | Corona Agi Deathcorona Again Sri Lanka Person Died