இந்தியாவின் பெரும் பணக்காரர்களான அம்பானி மற்றும் அதானியை சாவித்ரி ஜிண்டால் என்ற பெண் தொழிலதிபர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
அதிகரித்த சொத்து மதிப்பு
OP ஜிண்டால் குழுமத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது.
கடந்த காலண்டர் ஆண்டில் மட்டும் ஜிண்டாலின் சொத்து மதிப்பு சுமார் 9.6 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.
மேலும் இதன் மூலம் சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் 5வது மிகப்பெரிய பணக்காரராக மாறியுள்ளார், அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 25 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகிய முன்னணி பணக்காரர்களை சாவித்ரி ஜிண்டால் பின்னுக்கு தள்ளி இருப்பதாக ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் தெரிவித்துள்ளது.
சாவித்ரி ஜிண்டால் யார்?
சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் எஃகு தொழிலில் முன்னணியில் உள்ள OP ஜிண்டால் குழுமத்தின் தலைவராவார்.
இந்த நிறுவனத்தை சாவித்ரி ஜிண்டாலின் கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் தொடங்கினார்.
OP ஜிண்டால் குழுமம் JSW ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் & பவர், JSW எனர்ஜி, ஜிண்டால் ஹோல்டிங்ஸ், JSW Saw அத்துடன் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் ஆகிய பல்வேறு எஃகு துறைகளைக் கொண்டுள்ளது.